search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தொழிலாளியை தாக்கி மோட்டார் சைக்கிள்-செல்போன், பணம் பறிப்பு

    ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் அருகே தொழிலாளியை தாக்கி மோட்டார் சைக்கிள்-செல்போன் பணத்தை பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை தேங்காய்த்திட்டு வெற்றிவிநாயகர் நகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது56). மொசைக் தொழிலாளி. தற்போது இவர் மேட்டுப்பாளையத்தில் மொசைக் வேலை செய்து வருகிறார்.

    இவர் தினமும் வேலை முடிந்து ரெட்டியார்பாளையம் கம்பன்நகர் வழியாக வயல் வெளிநகரை கடந்து வீடு திரும்புவது வழக்கம்.

    அதுபோல்  கோவிந்தசாமி வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வயல்வெளிநகர் வழியே வந்து கொண்டிருந் தார். அங்குள்ள சாய்பாபா கோவில் அருகே வந்த போது 2 வாலிபர்கள் திடீரென கோவிந்தசாமியை வழிமறித்தனர்.

    பின்னர் அவர்கள் கோவிந்தசாமி சட்டைபையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோவிந்தசாமி வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், கோவிந்தசாமி செல்போனை கொடுக்க மறுத்து கையால் இறுக்கமாக பிடித்து கொண்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் மறைத்து வைத்திருந்த தடியை எடுத்து கோவிந்தசாமியை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடமிருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு அதிவேகமாக சென்றனர்.

    உடனே கோவிந்தசாமி அலறல் சத்தம் போட்டார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் கோவிந்தசாமியிடம் நடந்த விவரங்களை கேட்டு செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற நபர்களை பிடிக்க பின் தொடர்ந்து சென்றனர். ஆனால் அந்த வாலிபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த கோவிந்தசாமி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில்  புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற  வாலிபர் களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×