என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
விருத்தாசலம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை:
விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மங்கலம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து சென்றனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 19) என்பதும், இவர் கஞ்சா விற்பனை செய்துவருவதும் தெறியவந்தது. உடனே போலீசார் ராமச்சந்திரனை கைது செய்து அவரிடமிருந்து 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story






