என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்
    X
    கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்

    உள்கட்சி தேர்தல்: கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க.வினர் கோஷ்டி மோதல்

    கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் மற்றும் கோஷ்டி பூசல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, ரிஷிவந்தியம் ஆகிய 6 ஒன்றியங்கள், கள்ளக்குறிச்சி நகராட்சி, சின்னசேலம், வடக்கனந்தல், சங்கராபுரம், தியாகதுருகம், மணலூர்பேட்டை ஆகிய 5 பேரூராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கள்ளக்குறிச்சியில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்தனர்.

    அதன்படி அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் பகுதியைச் சேர்ந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரிடம் பணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெறத் தொடங்கினர். இந்நிலையில் ஒன்றிய செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட ஒவ்வொரு ஒன்றியத்திற்க்கும் ஒரு நபர் மட்டுமே விருப்ப மனு அளிக்கவேண்டும் என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் சின்னசேலம் பகுதியில் இருந்து விருப்ப மனு பெற வந்த நிர்வாகிகள் பணம் கட்டும் அனை வருக்கும் மனு வழங்க வேண்டும் எனக்கூறி தேர்தல் பொறுப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் இருந்து ஒன்றிய செயலாளருக்கு விருப்ப மனு தாக்கல் செய்ய வந்த ராஜசேகர் மற்றும் இளங்கோவன் ஆகியோருக்கும் விருப்ப மனு பெறுவது தொடர்பாக வாய்த்த கராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் மாவட்ட அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அங்கிருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமர குரு ஒன்றிய, நகர, பேரூர் கழகத்திற்கு எத்தனை பேர் வேண்டுமானாலும் விருப்பமனு அளிக்கலாம். ஆனால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கும், உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு மட்டுமே உட்கட்சி தேர்தலில் பொறுப்புகள் வழங்கப்படும் எனக் கூறினார். இதனை ஏற்று நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுவை பெற்றுச்சென்றனர். மீண்டும் பூர்த்தி செய்த மனுக்களை தேர்தல் பொறுப்பாளர்களிடம் வழங்கினர். கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஏராளமானோர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் அ.தி.மு.க.வினரிடையே வாக்குவாதம் மற்றும் கோஷ்டி பூசல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×