என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    சங்கராபுரம்:

    சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பையன் மகன் தென்னரசு(வயது 72) விவசாயி. இவர் அவரது வீட்டின் மாடிப்படியில் ஏறியபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பின் தலையில் படுகாயம் அடைந்த தென்னரசுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் பயிற்சி சப்இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×