search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர் அரியூரில் திருடுபோன நகையில் 15 பவுனை வீட்டில் வீசி சென்ற மர்ம நபர்கள்- போலீசார் விசாரணை

    வேலூர் அரியூரில் திருடுபோன நகையில் 15 பவுனை வீட்டில் வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுத்த அரியூர் நம்பிராஜபுரத்தை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். இவர் குடும்பத்துடன் கடந்த 21-ந்தேதி அதிகாலை செங்கத்தில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்று விட்டு காலை 11 மணிக்கு வீடு திரும்பினார்.

    தொடர்ந்து பீரோவில் நகைகள் வைக்கும்போது அங்கு நகைப்பெட்டியில் வைத்திருந்த நகைகள் எண்ணிக்கை குறைந்திருந்தது.

    இதனால் சந்தேகமடைந்து நகைப்பெட்டியில் இருந்த நகைகளை கணக்கு பார்த்தபோது 27 பவுன் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் இதுகுறித்து விசாரித்து வருகிறார். 

    இந்த நிலையில் ஒரிரு நாட்களுக்கு முன்னர் வீட்டின் முன்பகுதியில் வைக்கப்பட்டுள்ள மீன்தொட்டி அருகே ஒரு கவரில் 15 பவுன் நகைகள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது.

    இதைக்கண்ட குடும்பத்தினர் மாயமான நகைகளில் பாதி மட்டும் இங்கு எப்படி? வந்தது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

    போலீசாரும் திருடுபோன நகைகளை கண்டறிவதை விட பாதி நகைகளை யார் கொண்டு வந்து வைத்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×