search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை- வாலிபருக்கு வலைவீச்சு

    திருப்பூரில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூரில் கடந்த மாதம் 14 வயதான 9ம் வகுப்பு படிக்கும் மாணவி மாயமானார். இது குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அந்த மாணவி உசிலம்பட்டியில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் உசிலம்பட்டி சென்றனர்.

    அப்போது அந்த மாணவியுடன் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நாகராஜ் என்பவர் இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் நாகராஜ் தப்பியோடி விட்டார்.

    பின்னர் மாணவியிடம் விசாரணை நடத்திய போது நாகராஜ் ஆசைவார்த்தை கூறி உசிலம்பட்டி அழைத்துச் சென்று மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் நாகராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×