search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து- கணவன் கண்முன்னே உடல் நசுங்கி இறந்த மனைவி

    கடலூர் அருகே கணவன் கண்முன்பாக மனைவி உடல்நசுங்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    கடலூர்:

    கடலூர் அருகே ஆலப்பாக்கம் வடக்கு பள்ளி நீரோடை பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். விவசாயி. இவரது மனைவி தனசெல்வி (வயது 35). கணவன்-மனைவி 2 பேரும் இன்று காலை மோட்டார் சைக்கிளில் நெல்லிக்குப்பம் சென்றனர்.

    கடலூர் முதுநகர் பழைய போலீஸ் நிலையம் முன்பு அவர்கள் சென்றபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவநாதன் சாலை ஓரமும், தனசெல்வி சாலையிலும் விழுந்தனர்.

    அப்போது இவர்கள் மீது மோதிய லாரி தனசெல்வி மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்த முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் கண்முன்பாக மனைவி உடல்நசுங்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×