என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    X
    வளர்ச்சி பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.

    வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு

    மயிலாடுதுறை ஒன்றியத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லலிதா ஆய்வு செய்தார்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம், மணக்குடி ஊராட்சியில், ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் செலவில் சிமெண்ட் ரோடு, ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மினி டேங்க் (தண்ணீர்) ரூ.5 லட்சத்து15 ஆயிரம் செலவில் சமுதாய கழிவறை கட்டப்பட்டு வருகிறது. 

    அதேபோல் வள்ளாலகரம் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 57 ஆயிரம் செலவில் ஊராட்சி அலுவலகம், ரூ.5 லட்சத்து 37 ஆயிரம் செலவில் ராமலிங்கம் நகர் தார் சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. 

    மயிலாடுதுறை ஒன்றியம் முழுவதுமாக ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் 200&க்கும் மேற்பட்ட வீடுகள் பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. 

    ஆகக் கூடுதலாக ரூ.3 கோடியே 6 லட்சத்து 24 ஆயிரம் செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் லலிதா நேரில் சென்று அதில் தரமான முறையில் கட்டப்பட்டு வருகிறதா, முறைகேடுகள் ஏதாவது நடைபெற்று உள்ளதா, என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவு தரமாக வழங்கப்பட்டு வருகிறதா, உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். 

    நிகழ்ச்சியின்போது மயிலாடுதுறை ஒன்றிய ஆணையர் அன்பரசன், வட்டார வளர்ச்சி (ஊராட்சி) அலுவலர் மீனா, பொறியாளர்கள் மகேஸ்வரி, இளமுருகன், பூங்குழலி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், வள்ளாலகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட், மணக்குடி ஊராட்சித் தலைவர் வீரமணி உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.

    Next Story
    ×