என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
அரசு பஸ் டிரைவர் கைது
விபத்தில் 9-ம் வகுப்பு மாணவன் பவியானதை அடுத்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஈரோடு:
விபத்தில் 9-ம் வகுப்பு மாணவன் பவியானதை அடுத்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் அன்னை சத்யா நகர், வி.ஜி.பி. நகரை சேர்ந்தவர் அலாவுதீன் பாஷா. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் முகமது ரியாசுதீன் (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை முகமது ரியாசுதீன் பள்ளி முடிந்து அக்ரஹாரம் வண்டிப் பேட்டையை கடந்து தனது வீட்டுக்கு சைக்கிளில் சென்று கொண்டி ருந்தார்.
அப்போது முகமது ரியாசுதீனுக்கு பின்னால் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அரசு பஸ் ரியாசுதீன் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முகமது ரியாசுதீன் மீது பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ரியாசுதீன் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கருங்கல் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரியாசுதீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் செந்தில்குமார்(39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று ரியாசுதீன் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக் கப்பட்டது.உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story






