என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றிய போது எடுத்தப்படம்.
ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தல் படி அரசு நிலங்களில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுபடி கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவுறுத்தல் படி அரசு நிலங்களில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகின்றன.
அதன்படி ஈரோடு மாவட்டம் பெருந்துறை சாலை புறம்போக்கு நிலத்தில் 6 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அந்த ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராணி தலைமையில் வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் மற்றும் போலீசார் உதவியோடு ஜே.சி.பி. எந்திரம் மூலம் அந்த 6 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
Next Story






