என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    2-வது மனைவி கழுத்தறுத்து படுகொலை: போலீசுக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

    நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் 2-வது மனைவியை கொன்று கூலித்தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் தேன்கனிக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்த மேல்கொச்சாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா (வயது 35). விவசாய கூலித்தொழிலாளி. இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

    அதே ஊரை சேர்ந்தவர் மாதேவி (32). இவர் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பசப்பாவும், மாதேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி பழகி வந்ததால் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன்- மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் மாதேவியின் நடத்தையில் கடந்த சில நாட்களாக பசப்பாவுக்கு சந்தேகம் இருந்து வந்தது. வேறு ஒரு வாலிபருடன், மாதேவிக்கு ரகசியமாக கள்ளக்காதல் இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பசப்பா, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மாதேவியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பசப்பா, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதற்கிடையே அந்த வழியாக சென்ற கிராம மக்கள், மாதேவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுபற்றி அஞ்செட்டி போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் மாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே 2-வது மனைவியை கொலை செய்த பசப்பாவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மேல்கொச்சாவூர் வனப்பகுதியில் உள்ள கொய்யா மரத்தில் பசப்பா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பசப்பா உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவரது உடலை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×