search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    தேவதானப்பட்டி அருகே தீ விபத்தில் கரும்புத் தோட்டம் நாசம்

    தேவதானப்பட்டி அருகே தீ விபத்தில் கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது.
    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் அப்பகுதியில் சுமார் 8 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். 

    தோட்டத்தில் உள்ள வரப்பு முள்வேலியில் தீ வைத்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீ தோட்டத்துக்குள் பரவியது.

    இதில் சுமார் 4 ஏக்கர் கரும்பு தோட்டம், நீர்பாசன பைப் ஆகியவை சேதம் அடைந்தன. 

    இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போ£லீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×