என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் வட்டாரத்தில் விதை சான்று உதவி இயக்குநர் ஆய்வு
    X
    சங்கராபுரம் வட்டாரத்தில் விதை சான்று உதவி இயக்குநர் ஆய்வு

    சங்கராபுரம் வட்டாரத்தில் விதைப்பண்ணை அமைக்க இலக்கு நிர்ணயம்

    விழுப்புரம் மாவட்ட விதை சான்று உதவி இயக்குநர் கதிரேசன் நெடுமானூர் முத்துசாமிஎன்பவரின் எள் ஆதார நிலை விதைப்பண்ணை வயலை ஆய்வு செய்தார்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக சங்கராபுரம் வட்டாரத்திற்கு விதைப்பண்ணை அமைக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டது. நெல் 34 ஏக்கர், கம்பு 4 ஏக்கர், மணிலா 20 ஏக்கர், உளுந்து 85 ஏக்கர் எள் 3 ஏக்கர் பரப்பளவில் இலக்கு பிரித்து அளிக்கப்பட்டு, சோழம்பட்டு, நெடுமானூர், அரசம்பட்டு, பழையனூர், செம்பராம்பட்டு போன்ற கிராமங்களில் விதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்ட விதை சான்று உதவி இயக்குநர் கதிரேசன் நெடுமானூர் முத்துசாமிஎன்பவரின் எள் ஆதார நிலை விதைப்பண்ணை வயலை ஆய்வு செய்தார்.

    அதே கிராமத்தில் நடராஜன், ஜெயவர்மா ஆகியோர் வயல்களில் அமைக்கப்பட்டிருந்த நெல் விதை வயல்களை ஆய்வு செய்தார். விதைபண்ணை வயல்களை ஆய்வு செய்த போது எள் மற்றும் நெல் விதைப்பண்ணைகளில் தரமான விதை உற்பத்தி செய்தல், கலவண் நீக்குதல் போன்ற வழிகாட்டுதல்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

    மேலும் பூச்சி, நோய் தாக்குதல் இல்லாமல், தேவையான பயிற்பாதுகாப்பு மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். ஆய்வின்போது உளுந்தூர்பேட்டை விதைச்சான்று அலுவலர் செல்வமணி சங்கராபுரம் உதவி விதை அலுவலர்கள் முருகேசன், துரை ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×