search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    வீடு புகுந்து வக்கீல் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

    காரைக்குடியில் வீடு புகுந்து வக்கீல் உள்பட 3 பேரை அரிவாள் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவில் வசிப்பவர் குமரகுரு (வயது32). இவரது மனைவி விஜயஸ்ரீ (24). இருவரும் வழக்கறிஞராக பணிபுரிகின்றனர். 

    இவர்களது எதிர் வீட்டில் வசித்து வருபவர் காசி. அவரது மனைவி வாணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காசியுடன் வாழப்பிடிக்காமல் வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு வழக்கறிஞர்கள் தம்பதிதான் காரணம் என்று நினைத்த காசியின் தம்பி கணபதி நேற்று இரவு அவரது உறவினரான விக்கி, வெங்கடேஷ், முத்துப்பாண்டி ஆகியோருடன் வந்து குமரகுரு மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தியுள்ளர். 

    அப்போது அங்கு வந்த குமரகுருவை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. இதை தடுக்க வந்த குமரகுருவின் மனைவி விஜயஸ்ரீ, அப்பகுதியை சேர்ந்த மாரியப்பன் ஆகியோருக்கு கையிலும், தலையிலும் வெட்டு விழுந்தது. 

    காயமடைந்த வழக்கறிஞர் தம்பதியினர் காரைக்குடி அரசு மருத்துவமனையிலும், மாரியப்பன் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். 

    காரைக்குடி டி.எஸ்.பி., வினோஜி தப்பி ஓடிய குற்ற வாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×