என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சுற்றுலா வரும் வெளிநாட்டினர் இங்குள்ள புராதன சின்னங்கள் அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம், கடற்கரை கோயில், புலிக்குகை போன்ற பகுதிகளை சுற்றி பார்த்து விட்டு, அருகே உள்ள கடம்பாடி, வெண்புருஷம் கிராமங்களுக்கு சைக்கிள்உலா சென்று அங்குள்ள கிராம மக்களின் வாழ்வியல் கலாச்சாரத்தை பார்த்து செல்வது வழக்கம்.
கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக , சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டவர் வருகை தடைபட்டு சுற்றுலா தொழில் முடங்கியது.
தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் மாமல்லபுரம் பகுதிக்கு வெளி நாட்டினர் சுற்றுலா வருவது அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா கார் டிரைவர்கள், வழிகாட்டிகள், ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெளிநாட்டினர் வருகையால் மாமல்லபுரத்தில் மீண்டும் சுற்றுலா தொழில்களைகட்ட தொடங்கி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்