search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிக் கல்வித்துறை வளாகம்
    X
    பள்ளிக் கல்வித்துறை வளாகம்

    6 முதல் 9ஆம் வகுப்பு வரை உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி

    பொதுத்தேர்வை எழுதவுள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இறை வணக்கக் கூட்டத்திற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழகத்தில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகளை நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பொதுத்தேர்வை எழுதவுள்ள 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்றும் கூறி உள்ளது. மீண்டும் உடற்கல்வி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×