search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கூவத்தூர் அருகே இறால் பண்ணையில் காவலாளி மர்ம மரணம்

    கூவத்தூர் அருகே இறால் பண்ணையில் காவலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கூவத்தூர் அருகே இறால் பண்ணை உள்ளது. இங்கு காவலாளியாக பெங்களூரைச் சேர்ந்த சீனிவாசன் (வயது49) வேலை பார்த்து வந்தார்.

    சீனிவாசனின் குடும்பத்தினர் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இதனால் அவர் மட்டும் இறால் பண்ணையில் தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் இறால் பண்ணையில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சீனிவாசன் மர்மமாக இறந்து கிடந்தார். பணிக்கு வந்த மற்ற தொழிலாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கூவத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் காயங்கள் உள்ளன.

    இதனால் சீனிவாசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. சீனிவாசனின் சாவு குறித்து பெங்களூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    காவலாளி சீனிவாசனுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்பது குறித்து இறால் பண்ணை தொழிலாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×