என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கூவத்தூர் அருகே இறால் பண்ணையில் காவலாளி மர்ம மரணம்
மாமல்லபுரம்:
கூவத்தூர் அருகே இறால் பண்ணை உள்ளது. இங்கு காவலாளியாக பெங்களூரைச் சேர்ந்த சீனிவாசன் (வயது49) வேலை பார்த்து வந்தார்.
சீனிவாசனின் குடும்பத்தினர் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இதனால் அவர் மட்டும் இறால் பண்ணையில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் இறால் பண்ணையில் உள்ள அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சீனிவாசன் மர்மமாக இறந்து கிடந்தார். பணிக்கு வந்த மற்ற தொழிலாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கூவத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலில் காயங்கள் உள்ளன.
இதனால் சீனிவாசன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. சீனிவாசனின் சாவு குறித்து பெங்களூரில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவலாளி சீனிவாசனுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? என்பது குறித்து இறால் பண்ணை தொழிலாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்