என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணத்தில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
    X
    காவேரிப்பட்டணத்தில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.

    காவேரிப்பட்டணத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
    காவேரிப்பட்டணம், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் காவேரிபட்டினம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் மற்றும் காவேரிபட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் ஆகியோர் கலந்துகொண்டு 100 கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் வளைகாப்பு நடத்தி வைத்தனர்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மாலினி, பேரூராட்சி துணைத்தலைவர் மாலினி மாதையன், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த பணியாளர்கள் முருகம்மாள் சுமதி, கலா, ராஜலட்சுமி சாரதா, மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×