என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.
    X
    கைது செய்யப்பட்ட 2 பேரை படத்தில் காணலாம்.

    மது விற்பனை செய்த 2 பேர் கைது

    அந்தியூர் அருகே மது விற்பனை செய்த 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
    அந்தியூர் அருகே மது விற்பனை செய்த 2 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

    அந்தியூர் அருகே உள்ள செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் மது பாட்டிகள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதனை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். 

    அப்போது செம்புளிசாம்பாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி (72) என்பவர் 40 பாட்டில்களும், அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் (48) என்பவர் 28 பாட்டில்களும் பையில் போட்டு வைத்துக்கொண்டு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
     இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×