என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயமான விக்னேஷ்
கிரேன் டிரைவர் மாயம்
கிரேன் டிரைவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கிரேன் டிரைவர் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பழைய வத்தலக்குண்டு கிழக்கு வீதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது25). இவரது மனைவி சவுந்தர்யா.
கணவன்&மனைவி இருவரும் ஈரோடு பெருந்துறை ரோடு செங்கோடம்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். விக்னேஷ் கிரேன் டிரை வராக வேலை பார்த்து வந்தார். சவுந்தர்யா தற்போது 8 மாத கர்ப்பி ணியாக உள்ளார்.
இந்நிலையில் உடல் பரிசோதனை செய்வ தற்காக சவுந்தர்யா பழைய வத்தலக்குண்டுக்கு சென்றார். பின்னர் உடல் பரிசோதனை முடித்து கொண்டு கடந்த 15-ந் தேதி ஈரோட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் கணவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. விக்னேஷ் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து சவுந்தர்யா வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று மாயமான தன் கணவரை மீட்டுத்தர வேண்டும் என புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை தேடி வருகின்றனர்.
Next Story






