search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருவள்ளூர் அருகே விவசாயி வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 35 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் அருகே உள்ள திருப்பந்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி.

    மணிவண்ணன் தனது மகளை மருத்துவ படிப்பில் சேர்ப்பதற்காக தண்டலம் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றார்.

    பின்னர் மாலையில் திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    Next Story
    ×