என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் நடத்தப்படும் விடுதிகளின் மீது நடவடிக்கை- கலெக்டர் உத்தரவு
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
அதன்படி, தனியாரால் நடத்தப்படும், பணிபுரியும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறும் முறை, அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, முறையாக உரிமம் பெறாமல் இயங்கிவரும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உரிமம் பெறாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும் dswokallakurichi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






