search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிவாள் வெட்டு
    X
    அரிவாள் வெட்டு

    காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவன், என்ஜினீயர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பல்

    காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவன், என்ஜினீயர் உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடை பெற்று வருகிறது. நேற்று வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஓரிக்கை பகுதியை 12-ம் வகுப்பு மாணவன் ராகுல், திருப்பக்கூடல் தெருவை சேர்ந்த நரேஷ், கோவாவில் என்ஜினீயராக வேலை பார்த்து வரும் கவியரசு ஆகியோர் தங்களது நண்பர்களுடன் விழாவை காண வந்தனர்.

    அப்போது கூட்ட நெரிசலில் ஒருவரது காலை அவர்கள் மிதித்ததாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    சிறிது நேரம் கழித்து மாணவர்கள் நரசிங்கராவ் தெரு வழியாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது 15 பேர் கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்து மாணவர்களை வழிமறித்தனர்.

    வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் மாணவர்கள் நரேஷ், கவியரசு, ராகுல் ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவர்கள் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர்.

    உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நரேஷ், கவியரசு ஆகிய 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராகுல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த கவியரசு செஸ் சாம்பியன் ஆவார். விடுமுறையில் கோவில் விழாவுக்கு வந்த போது அவர் மீது தாக்குதல் நடந்துள்ளது.

    இது குறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×