என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    பவானிசாகர் அணை நீர்மட்டம் 89.96 அடியாக குறைந்தது

    குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது

    சத்தியமங்கலம்:

    குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது

    பவானி சாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கருர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 

    மேலும் இந்த அணையின் மூலம் ஏராளமான குடிநீர் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 மாதத்துக்கும் மேலாக  அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. 

    ஆனாலும் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. 

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 89.96 அடியாக இருந்தது. 

    அணைக்கு வினாடிக்கு 1042 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்கு 200 கனஅடியும், காலிங்கராயன்  வாய்க்காலில் 500 கனஅடியும்,  கீழ்பவானி வாய்க்காலில் 2380 கனஅடி என மொத்தம் 3080 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×