என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்12 March 2022 10:46 AM GMT (Updated: 12 March 2022 10:46 AM GMT)
மதுரையில் வீடு புகுந்து திருட முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரை ஜோசப்நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 36). இவர் நேற்று இரவு வாக்கிங் சென்றுவிட்டு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் பதறியபடி வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அங்கு மர்ம வாலிபர் நின்று கொண்டிருந்தார். உடனடியாக ராஜ்குமார் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து திருநகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். தெற்கு வாசல் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம் உத்தரவின்பேரில் திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பிடிபட்ட வாலிபர் ஜோசப்நகர் மெயின் ரோட்டை சேர்ந்த சின்னசாமி மகன் சுந்தரமூர்த்தி(வயது21) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுந்தரமூர்த்தி கூறுகையில் “ராஜ்குமார் வீட்டில் திருடுவது என்று முடிவு செய்தேன். இதற்காக அந்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தேன்.
அப்போது வீட்டின் கதவு மூடப்பட்டு இருந்தது. மோட்டார் சைக்கிளால் கதவை மோதினேன். கதவு திறந்து கொண்டது. அதன் பிறகு வீட்டுக்குள் புகுந்து கொள்ளை அடிக்க காத்திருந்தேன். அந்த நேரத்தில் ராஜ்குமார் வீட்டுக்குள் வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் என்னை பிடித்துவிட்டார்” என்றார்.
இதையடுத்து ராஜ்குமார் வீட்டில் திருடமுயன்ற சுந்தரமூர்த்தியை திருநகர் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X