என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி
கடலூர் அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்தபோது மதுபாட்டில்கள் குத்தி வாலிபர் பலி
கடலூர் அருகே சைக்கிளில் இருந்து தவறி விழுந்தபோது மதுபாட்டில்கள் குத்தி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே சான்றோர் பாளையம் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 28). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது சைக்கிளில் சான்றோர் பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவரது ஆடையில் வைத்திருந்த மது பாட்டில் உடைந்து தொடைப் பகுதியில் குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவ்வழியாக சென்றவர்கள் வெங்கடேசனை மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






