search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி மாணவன் பலி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி பிளஸ்-2 மாணவன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மகன் அரவிந்தன் (வயது 20). சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    தற்போது ஊருக்கு வந்த அவர் திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த கோவிந்தன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அவர் பகண்டை கூட்டுரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை தேடி வந்தனர்.

    இன்று காலை அத்தியூர் ஏரியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான மாணவன் அரவிந்தன் என தெரியவந்தது.

    இவர் ஏரியில் மீன் பிடிப்பதற்காக வந்தபோது தவறி விழுந்து இறந்துள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
    Next Story
    ×