என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவ கல்லூரி கண் சிகிச்சை பிரிவை முதல்வர் செல்வி ஆய்வு செய்த காட்சி.
சர்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்
சர்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசினார்.
வேலூர்:
உலக கண் நீர்அழுத்த நோய் விழிப்புணர்வு வார விழா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.
கல்லூரி முதல்வர்செல்வி தொடக்கி வைத்து பேசியதாவது:-
கண் நீர் அழுத்த நோய் பல வகைப்படும். இவற்றில் திறந்த கோண வகை கண் அழுத்த நோய், குறுகிய கோண வகை கண் அழுத்த நோய் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை கண்ணில் சுரக்கும் நீர் வெளியேறும் பாதையில் சல்லடை போன்ற அமைப்பில் இருக்கும். இந்த சல்லடையில் அடைப்பு ஏற்பட்டால் உருவாவது குறுகிய கோண வகை கண் அழுத்த நோயாகும்.
திறந்த கோண வகை கண் அழுத்த நோயில் இந்த சல்லடை சுருங்கி காணப்படும். இந்த வகையில் முன்அறிகுறிகள் ஏதுமின்றி பார்வையிழப்பு ஏற்படும். இவற்றால் கண்அழுத்தம் அதிகமாகி கண்பார்வை நரம்புக்கான ரத்த ஓட்டம் குறுகி மெதுவாக பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் நூறு பேருக்கு இருவர் கண்நீர் அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். பரம்பரையாக கண் நீர் அழுத்த நோயால் இருக்கும் குடும்பத்தினர், 40 வயதை கடந்தவர்கள், கண்ணில் அடிபட்டவர்கள், நீண்ட நாள்களாக கண்ணுக்கு மருந்து உபயோகிப்பவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் நீர்அழுத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
கண் நீர் அழுத்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய தேவையான ஓசிடி, கண் நரம்பியல் ஊடு கதிர்வீச்சு சாதனங்கள் வேலூர் அரசு மருத்துவமனையிலேயே உள்ளன. இந்த சிகிச்சை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரிவெலிங்கட்லா, குடியிருப்பு மருத்துவ அலுவலர் சி.இன்பராஜ், துறைத் தலைவர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனா.
Next Story






