என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    அரசு ஊழியரின் மோட்டார்சைக்கிளை திருடி கொண்டு சென்ற வாலிபர்

    பெருந்துறையில் மோட்டார் சைக்கிள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    பெருந்துறை,:

    பெருந்துறையில் மோட்டார் சைக்கிள் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெருந்துறை அடுத்துள்ள நரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தரணிதரன் (வயது 28). இவர் பெருந்துறையில் உள்ள வருவாய் வட்டா ட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று  தரணிதரன் இரவு 9 மணி அளவில் தனது  மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ரோட்டின் ஓரம் மோட்டார் சைக்கிளை  சாவியுடன் நிறுத்திவிட்டு செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது தரணிதரன் பின்னால் வந்த வாலிபர் களில்  ஒரு வாலிபர் திடீரென மோட்டார்சைக்கிளை திருடி சென்றார். உடனே தரணிதரன் அவர்களுக்கு பின்னால் ஓடிச்சென்றும் பிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து தனது நண்பர்களுக்கு போன் செய்து அவர்களை வர வைத்து அவர்கள் உதவியுடன் தேடிப்பார்த்தார். எனினும் கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து  பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பெருந்துறை சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×