என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்
    X
    இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

    பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

    வேதாரண்யத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை தாங்கினார். செல்வராஜ் எம்.பி. கண்டன உரை நிகழ்த்தினார். நாகை மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன், மாவட்ட குழு உறுப்பினர் மாரியப்பன் உட்பட பலர் கண்டன உரை நிகழ்த்தினர்.

    வேதாரண்யம் ஒன்றியத்தில் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக வந்த நெல் கதிர்கள் தண்ணீரில் பெருத்த சேதம் அடைந்ததற்கு விவசாயிகள் இழப்பீடு கிடைத்திடும் வகையில் பயிர் காப்பீட்டுத் தொகை உடன் கிடைத்திடவும், 100 நாள் வேலை பணியை காலை 8 என்பதை மாற்றி 10 மணிக்கு வேலை துவங்கிடவும், தொடர்ந்து கூட்டு குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிபடுகிறார்கள். 

    எனவே உடன் கூட்டு குடிநீர் கிடைத்திட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக ராஜாஜி பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    Next Story
    ×