search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது

    அரசால் தடைசெய்யப்பட்ட சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுக்கா, சே‌ஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு (வயது34). இவர் அனைகரைகோட்டாலம் அருகே 108 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார்.அப்போது கள்ளக்குறிச்சி காவல்துறையினரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டார்.

    அதே போன்று சின்ன சேலம், கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (39). இவர் கனியாமூர் ஆற்றுப்பாலம் அருகே லாரிடியூப்பில் 120 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த போது சின்னசேலம் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    இவர்கள் 2 பேரும் அரசால் தடைசெய்யப்பட்ட சாராயம் காய்ச்சுவது மற்றும் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது கள்ளக்குறிச்சி காவல் நிலையம், சின்னசேலம் ஆகிய காவல் நிலையங்களில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இவர்கள் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர்கள் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 2 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்ததின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மேற்படி 2 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 2 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
    Next Story
    ×