என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    விளக்கு கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலி

    கணவர் படத்துக்கு தீபம் ஏற்றியபோது விளக்கு கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலியானார்
    சிவகிரி:

    கணவர் படத்துக்கு தீபம் ஏற்றியபோது விளக்கு கவிழ்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி உடல் கருகி பலியானார்

    சிவகிரி அடுத்த கந்தசாமி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மனைவி தனலட்சுமி (74). கதிர்வேல் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.  

    இதையடுத்து கந்தசாமி பாளையம் பகுதியில் தனலட்சுமி வீட்டில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று கணவர் படத்திற்கு தீபம் ஏற்றி விட்டு திரும்பியபோது எதிர்பாராத விதமாக காலில் விளக்கு தட்டிவிட்டு கவிழ்ந்து மூதாட்டி அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது. 

    இதனால் வேதனை தாங்காமல் மூதாட்டி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.   அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூதாட்டி தனலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×