என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா
Byமாலை மலர்11 March 2022 9:30 AM GMT (Updated: 11 March 2022 9:30 AM GMT)
ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.
ஈரோடு:
ஈரோடு கோட்டை ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா இன்று தொடங்கியது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கினர்.
ஈரோடு கோட்டை பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம், பொங்கல் திருவிழா கடந்த 7-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
பின்னர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10-ந் தேதி விளக்கு பூஜையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மற்றும் பொங்கல் வைத்தல் ஆகியவை இன்று காலை நடைபெற்றது. கோவில் தலைமை பூசாரி முதலில் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பக்தர்கள் குண்டம் இறங்கினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றத. இன்று இரவு தெப்போற்சவம் நிகழ்ச்சியும், நாளை 13&ந் தேதி மறு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X