என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நெல் லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் திடீர் சோதனை
Byமாலை மலர்11 March 2022 9:26 AM GMT (Updated: 11 March 2022 9:26 AM GMT)
திட்டச்சேரி அருகே நெல் லாரிகளை நிறுத்தி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் புலனாய்வு துறை டி.ஜி.பி உத்தரவுப்படி திருச்சி சரக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி சுதர்சனம் மேற்பார்வையில் நாகை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கல்பனா மற்றும் போலீசார் செந்தில்குமார், ரீனா அடங்கிய குழுவினர் திட்டச்சேரி அருகே பனங்குடி மெயின் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய சேமிப்புக் கிடங்குகளுக்கு நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் மட்டும் நெல் மூட்டைகளை கொண்டு செல்வதை உறுதி செய்யும் வகையில், நெல் மூட்டைக்கள் ஏற்றப்படும் இடம், இறக்கப்படும் இடம், நெல் சாகுபடி குறித்த விவரங்கள் ஆகியவை கொண்ட டிரான்சீட் படிவம் உள்ளதா, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
இதன் மூலம் வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில நெல் கொள்முதல் செய்யப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X