search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மஞ்சள் நீர் ஊற்றி பண்ணாரியம்மனை வழிபட்ட பக்தர்கள்

    சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு வழி நெடுகிலும் மஞ்சள்நீர் ஊற்றி வரவேற்றனர்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள்  கலந்து கொண்டு வழி நெடுகிலும் மஞ்சள்நீர் ஊற்றி வரவேற்றனர். 

    சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 

    இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகிறார்.

    இதையொட்டி பண்ணாரி யம்மன் கோவி லில் இருந்து அம்மன் திருவீதி உலா புறப்பாடு நடந்தது. தொடர்ந்து சிக்கரசம் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சப்பரம் சென்றது. 

    நேற்று நெரிஞ்சிபேட்டை, கொத்தமங்கலம் சென்றது. இதையடுத்து தொட்டம்பாளையம் கொண்டு செல்லப்பட்டு இரவு அரங்கநாதர் கோவி லில் சிறப்பு பூஜைகள் செய் யப் பட்டு தங்க வைக்கப் பட்டது. 

    இதை தொடர்ந்து இன்று காலை (வெள்ளிக்கிழமை) தொட்டம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் அம்மன் திருவீதி உலா நடந்தது. 

    இதில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு வழி நெடு கிலும் மஞ்சள் நீர் ஊற்றி வர வேற்றனர். தொடர்ந்து பொதுமக்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

    அங்கு இருந்து புறப்பட்டு வெள்ளியம்பாளையம் பகுதியில்  மதியம் 12 மணி வரை சப்பரம் ஊர் வலம் நடந்தது. 

    இதிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழி பட்டனர்.

    இதையடுத்து இன்று மதியம் பெத்தாம்பாளையம் பகுதியில் சாமி ஊர்வலம் நடக்கிறது. 

    தொடர்ந்து மாலை 4 மணிக்கு பெத்தாம் பாளையம் பவானி ஆறு பகுதிக்கு அம்மன் அழைத்து செல்லப்பட்டு அங்கு பரிசலில் அம்மன் சப்பரம் ஏற்றி ஆற்றை கடந்து பசுவம் பாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து அங்கு அம்மன் சப்பரம் ஊர்வலம் நடக் கிறது.
     
    இதையடுத்து இரவு இக்கரை தத்தப்பள்ளி மற்றும் அக்கரை தத்தப்பள்ளி பகுதியில் அம்மன் வீதி உலா நடக்கிறது. அங்கு தங்க வைக்கப்படுகிறது. 

    நாளை உத்தாண்டியூர் பகுதியில் சப்பரம் வீதிஉலா நடக்கிறது.
    Next Story
    ×