என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆர்.டி.ஓ. திடீர் வாகன சோதனை
சென்னிமலை&ஈங்கூர் ரோட்டில் ஆர்.டி.ஓ. திடீர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
பெருந்துறை:
சென்னிமலை-ஈங்கூர் ரோட்டில் ஆர்.டி.ஓ. திடீர் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
பெருந்துறை வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், கதிர்வேல் ஆகியோர் நேற்று மாலை சென்னிமலை-ஈங்கூர் ரோட்டில் வாகன சோதனை யில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக தனியார் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு ஆட்களை ஏற்றி செல்லும் வேன் வந்தது. இதை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வேனுக்கு சாலை வரி ரூ. 96 ஆயிரம் கட்டாமல் இயக்கி வருவது தெரிந்தது. அதை தொடர்ந்து அந்த வேனை பறிமுதல் செய்து பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும், ஏர் ஹாரன் பொறுத்தி வாகனங்கள் இயக்கியது, அதிக பாரம் ஏற்றிவந்தது, ஸ்டிக்கர் ஒட்டாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 10 வாகனங்களுக்கு ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Next Story






