search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் முற்றிலும் கட்டுக்குள் வந்த கொரோனா பாதிப்பு

    நேற்று முன்தினம் 1,459 பேருக்கு பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு நேற்று 2 ஆக குறைந்தது. இம்மாத துவக்கம் முதல் ஒற்றை இலக்கத்தில் தினசரி பாதிப்பு பதிவாகி வந்தது. நேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக இல்லாத வகையில் பாதிப்பு 2ஆக பதிவாகியுள்ளது. நேற்று 16 பேர் நலம் பெற்றுள்ளனர்.

    இதுவரை மாவட்டத்தில் 1.28 லட்சம் பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 1.29 லட்சம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து 17-வது நாளாக நேற்றும் இறப்பு இல்லை. இதுவரை தொற்றுக்கு 1,052 பேர் பலியாகியுள்ளனர்.

    நேற்று முன்தினம் 1,459 பேருக்கு பரிசோதனை செய்ததில் 5 பேருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த மாத துவக்கத்தில் 1.5 ஆக இருந்த தொற்று பரவல் விகிதம் நேற்று 0.3 ஆக குறைந்தது.
    Next Story
    ×