search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்- பெண்கள் ஆர்வம்

    சாலை, குளம் தூர்வாரும் பணி, கட்டட பணிக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூ.342 சம்பளமாக வழங்கப்படுகிறது.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் நகராட்சியில் 21 வார்டுகளில் நகர்ப்புற வேலைவாய்ப்பு நகராட்சி மூலம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இதையடுத்து தற்போது வரை 9,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நகராட்சியில் 2,100 நபர்கள் மட்டுமே தேர்வு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

    தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து வேலைவாய்ப்புக்கான அட்டை 1,058 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

    படித்த பெண்கள் அவர்களது தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும் என நினைத்து வெள்ளகோவில் நகராட்சியில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் கொடுத்துள்ளனர்.

    இத்திட்டத்தில், சாலை, குளம் தூர்வாரும் பணி, கட்டட பணிக்கு ஒருநாள் ஒன்றுக்கு ரூ.342 சம்பளமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணைவதற்கு அதிக ஆர்வத்தோடு பெண்கள் அதிக அளவில் பதிவு செய்து உள்ளனர்.
    Next Story
    ×