என் மலர்
உள்ளூர் செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம் பேட்டை-மூவலூர் இணைப்பு பாலத்தின் கட்டுமான பணிகள் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பாலத்தை உடனடியாக கட்டி முடிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாப்படுகை அண்ணாசிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், மாரியப்பன், ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலாளர் துரைக்கண்ணு மாவட்டக்குழு உறுப்பினர்கள் மேகநாதன், ரவீந்திரன், அறிவழகன், இயற்கை விவசாயி ராமலிங்கம், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினர்.
15 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் தேவைக்காக கட்டப்படும் சோழம் பேட்டை-மூவலூர் இணைப்பு காவிரி பாலத்தை உடனே கட்ட வலியுறுத்தியும், அதுவரை அப்பகுதியில் தற்காலிக பாலம் அமைத்துத் தர வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
100-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட போராட்டத்திற்கு பிறகு பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரிகள் ஜூன் மாதத்திற்க்குள் பாலத்தின் பணிகளை முடிப்பதாக எழுத்து பூர்வமாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.
Next Story






