என் மலர்
உள்ளூர் செய்திகள்

குத்து விளக்கேற்றி போட்டிகள் தொடக்கம்,
மகளிர் தின விழா பேச்சுபோட்டி
சீர்காழி காவல் நிலையத்தில் மகளிர் தின விழா பேச்சுபோட்டி, பரிசளிப்பு நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழி காவல்நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறை துறை சார்பில் உலகமகளிர்தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி, பேச்சுபோட்டி ஆகியவை நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
மகளிர் தினத்தையொட்டி சீர்காழி காவல்நிலையத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.
மண்டல துணை வட்டாட்சியர் விஜயராணி, மகளிர் காவல் ஆய்வாளர்கள் கவிதா, சந்திரா, நாகரெத்தினம், ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி டிஎஸ்பி லாமெக் பேரணியை தொடங்கிவைத்தார்.பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் சிசுகொலையை தடுப்போம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை பள்ளி மாணவிகள் கையில் ஏந்தி துண்டுபிரசுரங்களை வழங்கியவாறு முக்கியவீதிகளின் வழியாக சென்றனர்.
தொடர்ந்து சீர்காழி காவல்நிலையத்தில் மகளிர் தின போட்டிகள் நடைபெற்றது.இதில் மாவட்ட உரிமையியல் நீதிமன் நீதிபதி பார்கவி, தபால் நிலைய அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கு ஏற் போட்டிகளை தொடங்கிவைத்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.
தொடர்ந்து பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், விழிப்புணர்வு பேச்சுபோட்டி போன்றவை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த பாலாஜி, கோபாலகிருஷ்ணன், வினோத் மற்றும் மகளிர் காவலர்கள் பங்கேற்றனர்.
Next Story






