என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    வானகரத்தில் லாரி கடத்தல்- 4 பேர் கைது

    சென்னை உள்பட பல இடங்களில் நடைபெற்ற லாரி மற்றும் வேன் திருட்டு சம்பவங்களில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    போரூர்:

    வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பாடசாலை தெருவை சேர்ந்தவர் பாளையம். சொந்தமாக லாரி வைத்து ஆற்று மணல் சப்ளை செய்து வருகிறார்.

    இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே சாலையோரம் லாரியை நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி லாரி மாயமாகி இருந்தது. இதுகுறித்து மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் வசந்தன், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் சம்பவ இடத்தில் இருந்து செங்கல்பட்டு வரை சுமார் 150 இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது லாரியை கடத்தி சென்ற மர்ம கும்பல் ராமநாதபுரத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று லாரி கடத்தலில் ஈடுபட்ட எண்ணூரை சேர்ந்த மோகன் என்கிற குட்டி மோகன், அம்பத்தூர் பகுதியை சேர்ந்த பொன்முருகன், சிலம்பரசன் மற்றும் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த செந்தில் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று சென்னை உள்பட பல இடங்களில் நடைபெற்ற லாரி மற்றும் வேன் திருட்டு சம்பவங்களில் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    இது தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×