search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

    வெடி விபத்தில் வாலிபர் பலியான சம்பவத்தில் ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    விருதுநகர்

    சிவகாசி அருகே மேலஒட்டம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த கணேசன் என்பவர் பரிதாபமாக இறந்தார். ராமர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து சல்வார்பட்டி கிராம நிர்வாக அதிகாரி அரிச்சந்திரன் வெம்பக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர் பிரம்மன், மேலாளர் நாகராஜ், போர்மேன் கணேசன் ஆகிய 3பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×