என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
கோபி அருகேஇளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபி அருகேஇளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தமிழ் செல்வி (23). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தமிழ் செல்வி சம்பவத்தன்று கோபி அருகே உள்ள கெட்டி செவியூர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்தார். அவர் திடீரென வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் விட்டத்தில் துப்பட்டவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை கண்ட அக்கம் பக் கத்தினர் போலீ சாருக்கு தகவல் கொடுத் தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிழ் செல்வி உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் என்ன காரணத் துக்காக தற்கொலை செய்து கொண்டார்? எனபது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






