என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஆடு திருடிய வாலிபர் சிக்கினார்
கொடுமுடி அருகே ஆடு திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள சிட்டப்புள்ளாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (31). இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
சம்பவத்தன்று ஆடுகளை வழக்கம் போல் பட்டியில் கட்டி வைத்து விட்டு வீட்டுக்குள் தூங்கி கொண்டு இருந்தார்.
அப்போது நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டது. அவர் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் வீட்டின் அருகே ஒரு ஆட்டை திருடி கொண்டு தனது பைக்கில் வைத்து கொண்டு தப்பிக்க முயன்றார்.
உடனே ராஜேஸ்குமார் அவரை பிடித்து கொண்டு திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கு வந்து அந்த வாலிபரை படித்து கொடுமுடி போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கரூர் ராஜிவ் காந்தி நகரை சேர்ந்த ராஜேஷ் (36) என தெரிய வந்தது. போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






