என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனத்துறையினரால் கைதான சங்கர் மற்றும் குமார்.
    X
    வனத்துறையினரால் கைதான சங்கர் மற்றும் குமார்.

    வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது

    குண்டேரிப்பள்ளம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்து துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
    டி.என்.பாளையம்:

    குண்டேரிப்பள்ளம் வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை கைது செய்து துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட குண் டேரிப்பள்ளம் அணை பகுதியில் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதி உள்ளது. 

    இங்கு ஏராளமான மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனப்பகுதியில் சிலர் துப்பாக்கியுடன் வன  விலங்குகளை வேட்டையாட சுற்றி திரிவதாக டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் குண்டேரிப்பள்ளம் அணை அருகே உள்ள வனப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் துப்பாக்கியுடன் இரண்டு 2 பேர் சுற்றி திரிவதை கண்ட வனத்துறையினர், அந்த அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    அதைத்தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள்  கொங்கர்பாளையத்தை சேர்ந்த சங்கர் (36), வினோபாநகரை சேர்ந்த குமார் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் வனப்பகுதியில் உள்ள மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக வனப்பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து நாட்டு துப்பாக்கி, தோட்டா மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வேட்டைக்கு பயன்படுத்தும் டார்ச் லைட் உள்ளிட்ட பொருட்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட பேரையும் வனத் துறையினர்  நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைக்க உள்ளனர்.

    சட்ட விரோதமாக வனவிலங்குகளை வேட்டையாட எவ்வாறு துப்பாக்கி களை தயார் செய்கின்றனர் என்பது குறித்து வனத்துறையினர் கூறும் போது, நாட்டு துப்பாக்கியின் பழைய மாடல்களை வைத்து லேத் வொர்க் செய்து வைத்துக் கொண்டு வனவிலங்குகளை வேட்டை யாட பயன்படுத்து வதோடு, ஒரே இடத்தில் தான் இதுபோன்ற சட்ட விரோத மாக நாட்டு துப்பாக்கி தயார் செய்யப் பட்டு பயன்படுத்தி வருகின் றனர் என்றனர்.

    மேலும் அவர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே வன விலங்குகளை வேட்டை யாடும் கும்பலை முழுமையாக கண்டறிய வாய்ப்பு உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×