என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் பூசணிக்காய் விற்பனை அமோகம்
Byமாலை மலர்7 March 2022 7:58 AM GMT (Updated: 7 March 2022 8:12 AM GMT)
குறைந்த விலையில் அதிக சத்துள்ள பூசணிக் காய்களை மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
உடுமலை:
உடுமலை மற்றும் மடத்துக்குளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குமரலிங்கம், பாப்பான்குளம், மடத்துக்குளம், காரத்தொழுவு போன்ற பல்வேறு பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களில் பூசணி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பொங்கல் திருநாள் முடிந்த போதிலும் மற்ற பருவத்திலும் வருடம் முழுவதும் பூசணிக்காயை சாகுபடி செய்து அருகில் உள்ள கணியூர் கமிஷன் கடை மற்றும் மடத்துக்குளம் வாரச்சந்தை போன்ற பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
குறைந்த விலையில் அதிக சத்துள்ள பூசணிக் காய்களை மக்களும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். நியாயமான விலை என்பதால் விற்பனையாளர்களும் அதனை வாங்குபவர்களும், ஒரே நேரத்தில் பயன் பெற்று வருகின்றனர். கோடை வெயிலுக்கு தினந்தோறும் அன்றாட காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய சத்துள்ள உணவாக பூசணிக்காய் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X