என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொலை
    X
    கொலை

    விருதுநகரில் மண்வெட்டியால் வெட்டி வாலிபர் படுகொலை

    குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை மண்வெட்டியால் தம்பியே வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள பாவாலி பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி. இவரது மகன்கள் லெக்கன் (வயது 30), அழகு முனீஸ்வரன் (26). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்து விவசாயம் மற்றும் கூலி வேலை பார்த்தனர்.

    நேற்று ராமசாமி மற்றும் அவரது மனைவி பாக்கியம் இருவரும் அதே ஊரில் நடந்த விசே‌ஷத்தில் பங்கேற்க சென்று விட்டனர். இதனால் நேற்று இரவு அண்ணன்-தம்பியான அழகு முனீஸ்வரன் மற்றும்  லெக்கன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர்.

    அப்போது அவர்கள் மது குடித்ததாக தெரிகிறது. போதையில் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அழகு முனீஸ்வரன் வீட்டில் கிடந்த மண்வெட்டியை எடுத்து அண்ணன் லெக்கனை சரமாரியாக வெட்டி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அவர்களது பெற்றோர் வீட்டிற்கு வந்தனர். பலத்த வெட்டுக் காயங்களுடன் கிடந்த லெக்கனை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே லெக்கன் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து அவரது தாய் பாக்கியம் ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகு முனீஸ்வரனை கைது செய்தனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை மண்வெட்டியால் தம்பியே வெட்டிக்கொன்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×