என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீ பிடித்ததால் பெயிண்டர் சாவு
சமையல் செய்தபோது தீ பிடித்ததால் பெயிண்டர் சாவு
ராஜபாளையத்தில் சமையல் செய்தபோது தீ பிடித்ததால் பெயிண்டர் பலியானார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 40), பெயிண்டர்.
இவர் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். வீட்டில் குளிக்க செல்வதற்கு முன்பு தனது உடலில் ஒட்டியிருந்த பெயிண்டை அகற்றுவதற்காக தின்னரை தேய்த்தார்.
பின்னர் ராமகிருஷ்ணன் அப்படியே எழுந்து சென்று கியாஸ் அடுப்பை பற்றவைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தீ அவர் மேல் பற்றியது. உடலில் தின்னர் தடவி இருந்ததால் வேகமாக தீ பரவியது. அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதும் ராமகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மைத்துனர் சரவணக்குமார் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






