என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள்.
ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, அந்தியூர், கோபி போன்ற பகுதியில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்தாகிறது. இந்நிலையில் வ.உ.சி. பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. இங்கு 750-க்கு மேற்பட்ட காய்கறி கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது.
இந்த மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மொத்த வியாபாரமும், காலை நேரங்களில் சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, அந்தியூர், கோபி போன்ற பகுதியில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்தாகிறது. இந்நிலையில் வ.உ.சி. பெரிய மார்க்கெட்டிற்கு காய்கறி வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.
இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறி விலை கிலோவுக்கு வருமாறு:-
கேரட்-120, பீட்ரூட்- 30, பீன்ஸ்-35, முள்ளங்கி-25, வெண்டைக்காய்-25, கத்திரிக்காய்-80, முருங் கைக்காய்-80 புடலங் காய்-20, பீர்க்கங்காய்-25, அவரைக்காய்-25, சுரைக் காய்-5, முட்டைக் கோஸ்-15, பச்சை மிளகாய்-80, இஞ்சி-50, காளிப் பிளவர்-30, சேனைக்கிழங்கு-20, கொத்தவரங்காய்- 30, தக்காளி-7 முதல் 10 வரை விற்பனை செய்யப்பட்டது.
Next Story






