search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உடுமலை அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் பிரிவு புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

    பழைய கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டுமானத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    உடுமலை:

    உடுமலை அரசு மருத்துவமனைக்கு தினமும் 700-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர். 

    இங்கு உள்நோயாளியாக தங்கி, சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது. இதற்காக ‘டயாலிசிஸ்’ சிகிச்சை, ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனைக்கான ஆய்வகம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில் ரூ.9 கோடி மதிப்பில் விபத்து சிகிச்சை பிரிவு கட்டும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக பழைய கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தி புதிய கட்டுமானத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    அவ்வகையில் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அவசர சிகிச்சை மையம் மற்றும் டயாலிசிஸ் பிரிவு, புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மருத்துவப்பணிகள் துறையினர் கூறுகையில்,

     ஓரிரு தினங்களில் பழைய கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்படும். 

    அதற்காக டெக்னீசியன் வரவழைக்கப்பட்டு டயாலிசிஸ் பிரிவை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
    Next Story
    ×